» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் புதிய தங்கச் சுரங்கம்: ஆந்திராவில் 0.8 டன் தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு!

வெள்ளி 26, ஜூன் 2026 11:24:32 AM (IST)



ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தில் இருந்து நடப்பு நிதியாண்டில் (2026-27) 0.8 டன் (800 கிலோ) தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கத் திட்டமான இதனை ஜியோமைசின் மைனிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. ஜொன்னகிரி தங்கச் சுரங்கப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு மற்றும் ஆரம்பகட்ட கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அங்குத் தங்கம் பிரித்தெடுக்கும் ஆலை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 

இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இந்த ஆலை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலை பயன்பாட்டிற்கு வந்ததும், நாளொன்றுக்கு 1,500 டன் தாதுக்களைச் சுத்திகரித்து, ஆண்டுக்கு 0.8 டன் தங்கம் பிரித்தெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியாவின் தங்கம் இறக்குமதித் தேவை ஓரளவிற்கு உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ளது. திறந்தவெளிச் சுரங்க (Open-cast mining) முறையில் தாதுக்கள் எடுக்கப்பட்டு வரும் இந்த ஜொன்னகிரி திட்டத்தின் மூலம், கர்னூல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory