» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிலிண்டர் விலை விலை உயர்வுக்கு கண்டனம் : கேரளாவில் மே 6-ம் தேதி ஓட்டல்கள் மூடல்!

சனி 2, மே 2026 4:55:39 PM (IST)

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே அடியாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, வரும் மே 6-ம் தேதி கேரளா மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை மூடப்போவதாக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் வணிக சிலிண்டர் விலை சுமார் 993 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டரின் விலை 3,000 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு உணவகத் தொழிலைப் பெருமளவில் முடக்கும் என அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ராஜூ அப்சரா கூறியிருப்பதாவது: ஏற்கனவே பல்வேறு விலைவாசி உயர்வால் இத்துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், சிலிண்டர் விலையேற்றம் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல அமைந்துள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே பல நிறுவனங்கள் தட்டுத்தடுமாறி இயங்கி வருகின்றன. தற்போதைய விலை உயர்வு உணவகங்களை நிரந்தரமாக மூடும் நிலைக்குத் தள்ளிவிடும். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மே 6-ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும்.

எரிவாயு விலை உயர்வால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இது சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் என்றும் வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory