» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிலிண்டர் விலை விலை உயர்வுக்கு கண்டனம் : கேரளாவில் மே 6-ம் தேதி ஓட்டல்கள் மூடல்!
சனி 2, மே 2026 4:55:39 PM (IST)
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே அடியாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, வரும் மே 6-ம் தேதி கேரளா மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை மூடப்போவதாக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் வணிக சிலிண்டர் விலை சுமார் 993 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டரின் விலை 3,000 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு உணவகத் தொழிலைப் பெருமளவில் முடக்கும் என அஞ்சப்படுகிறது.
இது தொடர்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ராஜூ அப்சரா கூறியிருப்பதாவது: ஏற்கனவே பல்வேறு விலைவாசி உயர்வால் இத்துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், சிலிண்டர் விலையேற்றம் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல அமைந்துள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே பல நிறுவனங்கள் தட்டுத்தடுமாறி இயங்கி வருகின்றன. தற்போதைய விலை உயர்வு உணவகங்களை நிரந்தரமாக மூடும் நிலைக்குத் தள்ளிவிடும். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மே 6-ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும்.
எரிவாயு விலை உயர்வால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இது சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் என்றும் வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்கு எண்ணிக்கை எதிரொலி: கொல்கத்தாவில் நாளை முதல் 60 நாட்களுக்கு 144 தடை அமல்!
சனி 2, மே 2026 4:02:16 PM (IST)

புனேயில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 65 வயது முதியவர் கைது!
சனி 2, மே 2026 3:36:16 PM (IST)

செல்போனில் எச்சரிக்கை ஒலி கேட்டால் அச்சப்பட வேண்டாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
சனி 2, மே 2026 12:26:10 PM (IST)

ஐதராபாத் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சனி 2, மே 2026 11:02:35 AM (IST)

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் கருவைக் கலைக்க காலக்கெடு தேவையில்லை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:46:58 PM (IST)

ஆதார் சிஸ்டத்தில் ஊடுருவல்: ஏஐ பயன்படுத்தி தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல் சிக்கியது!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:42:55 PM (IST)


