» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராணுவ முகாமில் சக வீரர்கள் 29 பேரின் செல்போன்கள் திருடிய ராணுவ வீரர் கைது
திங்கள் 21, ஜூலை 2025 12:29:55 PM (IST)
மும்பை ராணுவ முகாமில் சக வீரர்கள் 29 பேரின் செல்போன்களை திருடிய ராணுவ வீரர் கோவையில் கைது செய்யப்பட்டார்.
மும்பை கொலபாவில் உள்ள ராணுவ படை பிரிவில் கடந்த மாதம் ராணுவ வீரர்களின் 29 செல்போன்கள் மாயமாகின. இது குறித்து கப்பரேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மாயமான ஒரு செல்போன் தமிழ்நாட்டில் உள்ள கோவையில் சுவிட்ச்-ஆன் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் செல்போனை பயன்படுத்திய அல்பா துய்பாங் (24) என்பவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட அல்பா துய்பாங் ராணுவ வீரர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மிசோரமை சேர்ந்த இவர், 4 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார். இவர் மும்பை கொலபா ராணுவ முகாமில் பணியில் இருந்தபோது சக வீரர்களின் செல்போன்களை திருடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
போலீசார் அவரிடம் இருந்து 20 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவர் திருடி சென்ற செல்போன்களை விற்பனை செய்ய இருந்ததாக போலீசார் கூறினர். ராணுவ வீரர் அல்பா துய்பாங்கை கப்பரேடு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடியுடன் துரை வைகோ சந்திப்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:25:39 PM (IST)

டெல்லியில் சுதா எம்.பியிடம் நகை பறிப்பு: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:12:58 PM (IST)

அரசு திட்டங்களில் முதல்வர் பெயருக்கு தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 12:24:47 PM (IST)

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஷிபு சோரன் காலமானார்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 10:35:59 AM (IST)

கற்பழிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே இருங்கள்: போலீசாரின் விழிப்புணர்வு போஸ்டரால் சர்ச்சை!!
ஞாயிறு 3, ஆகஸ்ட் 2025 10:39:02 AM (IST)

சத்தீஷ்காரில் கைதான கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்: கேரள அரசியல் கட்சியினர் வரவேற்பு
சனி 2, ஆகஸ்ட் 2025 5:41:33 PM (IST)
