» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)
ஹரியானா, கோவாவிற்கு ஆளுநர்களையும், லடாக்கிற்கு துணை நிலை ஆளுநரையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
இதன்படி, கோவா மாநில ஆளுநராக பசுபதி அசோக் கஜபதி ராஜு நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மூத்த அரசியல்வாதி ஆவார். விமான போக்குவரத்து துறையின் முன்னாள் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர்.இதேபோன்று, அரியானா மாநில ஆளுநராக ஆஷிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். பேராசிரியரான அவர் உயர் கல்வி துறையில் நிர்வாக துறையில் அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.
லடாக் யூனியன் பிரதேச ஆளுநராக கவீந்தர் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார். ஜம்முவை சேர்ந்த மூத்த பா.ஜ.க. உறுப்பினரான அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சட்டசபைக்கான சபாநாயகராகவும் பதவி வகித்திருக்கிறார்.
லடாக் துணை நிலை ஆளுநராக பதவி வகித்த ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலான, பி.டி. மிஷ்ரா ராஜினாமா செய்த நிலையில், அதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்று கொண்டார். இதனை குடியரசுத் தலைவர் மாளிகை உறுதி செய்து அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதன் 6, ஆகஸ்ட் 2025 4:52:35 PM (IST)

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே நீடிக்கும் : ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
புதன் 6, ஆகஸ்ட் 2025 12:37:01 PM (IST)

உத்தரகாண்ட்டில் திடீர் மேகவெடிப்பால் வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்: 17 பேர் உயிரிழப்பு!
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 4:34:29 PM (IST)

ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 4:14:11 PM (IST)

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: ட்ரம்ப் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 11:37:45 AM (IST)

பிரதமர் மோடியுடன் துரை வைகோ சந்திப்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:25:39 PM (IST)


.gif)