» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 12:49:44 PM (IST)
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18-ஆவது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டி மே.25ஆம் தேதி நடைபெறவிருந்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் போட்டிகளை காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.”இந்தியாவில் போர்ப் பதற்றம் இருக்கும்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது நல்லதல்ல” என பிசிசிஐ அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளார்.
இதனிடையே நேற்றிரவு (மே.8) தர்மசாலாவில் ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். கிரிக்கெட் வீரர்கள், தொழில்நுட்ப குழிவினர்கள் பாதுகாப்பாக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடைபெறும் தேதி குறித்த முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய அரசு அறிவித்த குழுவில் சசி தரூர் பெயர் இடம்பெற்றது நேர்மையற்றது: ஜெய்ராம் ரமேஷ்
சனி 17, மே 2025 4:49:28 PM (IST)

பாகிஸ்தானுக்கு நிதி அளிப்பது பயங்கரவாதத்துக்கு மறைமுக ஆதரவுக்கு சமம்: ராஜ்நாத் சிங்
சனி 17, மே 2025 12:03:28 PM (IST)

இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை: ப.சிதம்பரம் கவலை
வெள்ளி 16, மே 2025 4:36:27 PM (IST)

வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை கடலோர காவல் படை பத்திரமாக மீட்பு!
வெள்ளி 16, மே 2025 12:16:43 PM (IST)
_1747289815.jpg)
ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை!!
வியாழன் 15, மே 2025 11:47:14 AM (IST)

தமிழக ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பிய ஜனாதிபதி!
வியாழன் 15, மே 2025 10:35:42 AM (IST)
