» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ராகுல் காந்தி ஜூன் 17 முதல் நாடு முழுவதும் பிரச்சாரம்!

ஞாயிறு 14, ஜூன் 2026 1:09:38 PM (IST)

மத்திய கல்வி வாரிய (சிபிஎஸ்இ) தேர்வு மதிப்பெண் குளறுபடிகள் மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுப் பிரச்சினைகளுக்கு எதிராக, ராகுல் காந்தி ஜூன் 17-ஆம் தேதி முதல் நாடு தழுவிய பிரம்மாண்ட பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்த அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ல் மறுதேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மத்திய கல்வி வாரிய விடைத்தாள் மதிப்பீட்டிலும் கடுமையான குளறுபடிகள் நடந்துள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.

இந்தத் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுப் பிரச்சினைகளுக்கு எதிராக, ராகுல் காந்தி ஜூன் 17-ஆம் தேதி தனது நாடு தழுவிய பிரச்சாரத்தை ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் தொடங்கவுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜூலை 10-ஆம் தேதி அலகாபாத் மற்றும் பாட்னாவிலும், ஜூலை 14-ஆம் தேதி டெல்லியிலும் பிரம்மாண்ட மாணவர் மாநாடுகள் நடத்தப்படவுள்ளன. இந்த இயக்கத்தின் மூலம் வினாத்தாள் கசிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான தேர்வர்கள், கல்வியாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஒன்றிணைக்கப்படவுள்ளனர்.

வினாத்தாள் கசிவு காரணமாக நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இப்பிரச்சாரத்தின் பொதுவான நோக்கமாகும். இதற்காக மாணவர் பேரவை மற்றும் இளைஞர் காங்கிரஸ் அமைப்புகள் மூலம் நாடு முழுவதும் நேரடி மற்றும் இணைய வழி (டிஜிட்டல்) பரப்புரைகளும், கல்வி நிறுவனங்களில் தொடர் கலந்துரையாடல்களும் நடத்தப்படவுள்ளன. அரசியல் தொடர்புகளுக்கு அப்பாற் பட்டு மாணவர்களைத் திரட்டி, தேர்வுத் தோல்விகளுக்குத் தேசிய முகமைகளைப் பொறுப்பேற்க வலியுறுத்த இந்த இயக்கம் ஒரு முக்கியத் தளமாக அமையும்.

நீட் தேர்வை முற்றிலும் பரவலாக்குதல், தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்தல் மற்றும் வினாத்தாள் கசிவு மோசடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறைப் பொறுப்பாளர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்யக் கோருவது போன்ற முக்கியக் கோரிக்கைகளை இந்த இயக்கம் வீதிகளுக்குக் கொண்டு செல்லவுள்ளது என விபரிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory