» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் ? உச்சநீதிமன்றம் கேள்வி
புதன் 12, பிப்ரவரி 2025 5:05:57 PM (IST)
அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம். வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அப்போது, அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், போக்குவரத்துத் துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்பினால் அவருக்கு எதிரான வழக்கை மெரிட்டில் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த முறையே அதிருப்தியை தெரிவித்திருந்தோம், உரிய விளக்கம் அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சிகளாக உள்ளதால் அவர்கள் பயப்பட வாய்ப்புள்ளது. 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அமைச்சராக தொடர்ந்தால் என்னவாகும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: குஜராத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
புதன் 19, மார்ச் 2025 4:26:40 PM (IST)

தெஹுலி 24பேர் கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை: 44 ஆண்டுக்குப் பின் தீர்ப்பு
புதன் 19, மார்ச் 2025 10:24:38 AM (IST)

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 5:33:56 PM (IST)

உங்களை இந்தியாவில் சந்திக்க காத்திருக்கிறேன்: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 4:25:39 PM (IST)

கர்நாடகாவில் ரூ.275 கோடி போதை பொருள் சிக்கியது: 2 வெளிநாட்டு பெண்கள் கைது
திங்கள் 17, மார்ச் 2025 9:20:25 PM (IST)

டெல்லி பிரதமர் மோடி - நியூசிலாந்து பிரதமர் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
திங்கள் 17, மார்ச் 2025 5:34:02 PM (IST)
