» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் ? உச்சநீதிமன்றம் கேள்வி
புதன் 12, பிப்ரவரி 2025 5:05:57 PM (IST)
அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம். வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அப்போது, அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், போக்குவரத்துத் துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்பினால் அவருக்கு எதிரான வழக்கை மெரிட்டில் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த முறையே அதிருப்தியை தெரிவித்திருந்தோம், உரிய விளக்கம் அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சிகளாக உள்ளதால் அவர்கள் பயப்பட வாய்ப்புள்ளது. 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அமைச்சராக தொடர்ந்தால் என்னவாகும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் அரசியல் அமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா
செவ்வாய் 8, ஜூலை 2025 4:39:15 PM (IST)

ரியல் எஸ்டேட் மோசடி: நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 8, ஜூலை 2025 3:41:11 PM (IST)

அரசு பங்களாவை 2 வாரத்தில் காலி செய்து விடுவேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
திங்கள் 7, ஜூலை 2025 4:45:26 PM (IST)

பீகார் தொழிலதிபர் சுட்டுக்கொலை: இறுதிச் சடங்குக்கு வந்த குற்றவாளி கைது!
திங்கள் 7, ஜூலை 2025 11:48:28 AM (IST)

கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை: பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:09:32 AM (IST)

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)
