» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமலாக்கத்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 22, ஜனவரி 2025 4:57:02 PM (IST)
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மீது பணமோசடி விசாரணையைத் தொடங்கியதற்காக அமலாக்க இயக்குனரகத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராகேஷ் ஜெயின் என்பவர் மீது குல் அச்ரா என்பவர் பண மோசடி மற்றும் ஒப்பந்த மீறல் தொடர்பாக அமலாக்கத் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விசாரணைக்கு எதிராக ராகேஷ் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மிலிந்த் ஜாதவ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மக்களை துன்புறுத்துவதன் மூலம் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முடியாது என்றும் புலனாய்வு அமைப்புகள் சட்டத்தின் அளவுகோல்களுக்குள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அமலாக்க இயக்குனரகத்திற்கு ரூ.1 லட்சமும், ராகேஷ் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டதாகக் கூறி அவர் மீது புகார் அளித்த அச்ராவுக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியைத் தாக்கிய கடுமையான புழுதிப் புயல் : 92 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்று!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:23:53 PM (IST)

டாக்டரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இருமல் மருந்து வாங்க முடியாது: மத்திய அரசு அதிரடி
செவ்வாய் 16, ஜூன் 2026 3:22:58 PM (IST)

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:26:40 AM (IST)

மிக உயரமான யானை ராமனை கேரள அரசே பராமரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 16, ஜூன் 2026 10:19:27 AM (IST)

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் : பிரதமர் மோடி வரவேற்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:53:29 PM (IST)

சிறுமிக்கு 3 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை: கால்பந்து பயிற்சியாளர் போக்சோவில் கைது!
திங்கள் 15, ஜூன் 2026 4:25:49 PM (IST)


