» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமலாக்கத்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 22, ஜனவரி 2025 4:57:02 PM (IST)
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மீது பணமோசடி விசாரணையைத் தொடங்கியதற்காக அமலாக்க இயக்குனரகத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராகேஷ் ஜெயின் என்பவர் மீது குல் அச்ரா என்பவர் பண மோசடி மற்றும் ஒப்பந்த மீறல் தொடர்பாக அமலாக்கத் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விசாரணைக்கு எதிராக ராகேஷ் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மிலிந்த் ஜாதவ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மக்களை துன்புறுத்துவதன் மூலம் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முடியாது என்றும் புலனாய்வு அமைப்புகள் சட்டத்தின் அளவுகோல்களுக்குள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அமலாக்க இயக்குனரகத்திற்கு ரூ.1 லட்சமும், ராகேஷ் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டதாகக் கூறி அவர் மீது புகார் அளித்த அச்ராவுக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
