» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முல்லைப்பெரியாறு அணை வழக்கில் தேசிய அளவில் நிபுணர் குழு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!!
புதன் 8, ஜனவரி 2025 5:28:27 PM (IST)
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கின் விசாரணையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் தேசிய அளவில் நிபுணர் குழுவை அமைக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி நிபுணர் குழுவை இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்பு ரீதியான ஆய்வு கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தேசிய அணை பாதுகாப்பு தொடர்பான தேசிய குழு அமைப்பதில் எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும், நிபுணர்கள் குழு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜனவரி 22ல் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மில்க்ஷேக்கில் விஷம் கலந்து தந்தையை கொன்ற பெண் காவலர்: 3 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:41:26 AM (IST)

மேற்காசிய நெருக்கடியை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை
சனி 28, மார்ச் 2026 4:10:10 PM (IST)

ஏப்ரல் 1 முதல் வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு!
சனி 28, மார்ச் 2026 12:18:19 PM (IST)

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? சமூக வலைதள வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:49:11 AM (IST)

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடி குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை
வெள்ளி 27, மார்ச் 2026 10:49:35 AM (IST)

எரிபொருள் தட்டுப்பாடு என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை : மத்திய அரசு எச்சரிக்கை!
வெள்ளி 27, மார்ச் 2026 8:32:34 AM (IST)

