» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் விலை ரூ.16 அதிகரிப்பு: ரூ.1,980-க்கு விற்பனை!
திங்கள் 2, டிசம்பர் 2024 10:40:51 AM (IST)
வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் விலை ரூ.16.5 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து சென்னையில் சிலிண்டா் விலை ரூ.1,980- என விற்பனையாகிறது.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன.
அந்த வகையில், தொடா்ந்து 5-ஆவது மாதமாக ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட அந்த வகை சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.16.5 உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயா்வைத் தொடா்ந்து சென்னையில் வணிக சிலிண்டா் விலை ரூ.1,980-ஆகவும், மும்பையில் ரூ.1,771-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,927-ஆகவும் உயா்ந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டரின் விலை ரூ.172.5 உயா்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டா்களின் விலை இம்மாதமும் மாற்றமின்றி ரூ.803-ஆக தொடா்கிறது.
இதேபோல விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.1,318.12 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருளின் விலை சென்னையில் ரூ.95,231, தில்லியில் ரூ.91,856, மும்பையில் ரூ.85,861-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த நவம்பா் 1-ஆம் தேதி விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.2,941.5 உயா்த்தப்பட்ட நிலையில், தொடா்ந்து 2-ஆவது மாதமாக இம்முறையும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏர் இந்தியா என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 12, ஜூலை 2025 10:17:14 AM (IST)

தேர்தல் ஆணையம் பாஜக நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வெள்ளி 11, ஜூலை 2025 3:47:41 PM (IST)

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
வெள்ளி 11, ஜூலை 2025 12:44:15 PM (IST)

இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்!!
வெள்ளி 11, ஜூலை 2025 10:58:09 AM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்குத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 11, ஜூலை 2025 8:23:20 AM (IST)

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வியாழன் 10, ஜூலை 2025 4:51:19 PM (IST)
