» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் : உமர் அப்துல்லா கடும் கண்டனம்
திங்கள் 4, நவம்பர் 2024 11:12:59 AM (IST)
ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது என்று முதல்-அமைச்சர்உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குண்டு பாதி வழியிலேயே சாலையில் விழுந்தது. அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. சந்தையில் இருந்த மக்கள் அலறியடித்தபடி அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த குண்டு வீச்சில் 2 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
குண்டுவீச்சு சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இந்த நிலையில் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்-அமைச்சர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஸ்ரீநகரில் உள்ள சந்தையில் அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது. அப்பாவி பொதுமக்களை குறிவைப்பதை நியாயப்படுத்த முடியாது. இந்த தாக்குதல்களின் வேகத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ராணுவம் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், இதனால் மக்கள் எந்த அச்சமும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்" என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டல் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது!
சனி 12, ஜூலை 2025 5:50:59 PM (IST)

ஏர் இந்தியா என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 12, ஜூலை 2025 10:17:14 AM (IST)

தேர்தல் ஆணையம் பாஜக நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வெள்ளி 11, ஜூலை 2025 3:47:41 PM (IST)

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
வெள்ளி 11, ஜூலை 2025 12:44:15 PM (IST)

இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்!!
வெள்ளி 11, ஜூலை 2025 10:58:09 AM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்குத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 11, ஜூலை 2025 8:23:20 AM (IST)
