» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாதவிடாய் கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 13, மார்ச் 2026 5:00:23 PM (IST)
பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இத்தகைய சட்டம் பெண்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என்று நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்த முக்கியக் கருத்துகள்: மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பைக் கட்டாயமாக்கினால், தனியார் நிறுவன உரிமையாளர்கள் பெண்களை வேலைக்கு அமர்த்துவதைத் தவிர்க்கக்கூடும். இது பெண்களின் தொழில்முறை வாய்ப்புகளைப் பறிப்பதோடு, அவர்களைப் பின்னுக்குத் தள்ளும்.
இத்தகைய சட்டம், ஆண்களை விடப் பெண்கள் உடல் ரீதியாகத் தாழ்வானவர்கள் என்ற தவறான பிம்பத்தை உருவாக்கக்கூடும். இது பெண்களிடையே உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியலமைப்பு ரீதியாகப் பெண்களுக்கு உரிமைகள் இருந்தாலும், நடைமுறைச் சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து விடுப்பு அளிப்பது வரவேற்கத்தக்கது, ஆனால் அதைச் சட்டமாக்கினால் பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு குறையும்.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிப்படைந்த எந்தப் பெண்ணும் நீதிமன்றத்தை அணுகவில்லை" என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது கொள்கை சார்ந்த முடிவு என்பதால் மத்திய அரசே இதில் முடிவெடுக்கலாம் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக டிஜிபி நியமனம்: மார்ச் 20-ல் ஆலோசனைக் கூட்டம் - யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 13, மார்ச் 2026 12:23:23 PM (IST)

ஜம்முவில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு முயற்சி - முதியவர் கைது!
வெள்ளி 13, மார்ச் 2026 8:49:29 AM (IST)

மேற்கு வங்கத்தின் 22-வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு: மம்தா பானர்ஜி வாழ்த்து!
வியாழன் 12, மார்ச் 2026 5:17:05 PM (IST)

கேரளம் பெயர் மாற்றம் மகிழ்ச்சியான தருணம் : கொச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
புதன் 11, மார்ச் 2026 5:10:36 PM (IST)

கோமா நிலையில் உள்ள இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!
புதன் 11, மார்ச் 2026 12:26:18 PM (IST)

இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதி
புதன் 11, மார்ச் 2026 11:53:28 AM (IST)

