» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் : இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!
சனி 5, அக்டோபர் 2024 5:25:59 PM (IST)
தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் ஒரு நாளைக்கு சர்வதேச விமானங்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது. இந்த சூழலில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இண்டிகோ எக்ஸ் வலைதள பக்க பதிவில், "தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, எங்களது பயணிகள் விமான நிலையங்களில் செக்-இன் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம். பயணிகளுக்கு உதவுவதற்காக எங்களது நிறுவன பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் முடிந்தவரை தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்புநிலைக்கு திரும்புவதற்காக பணியாற்றி வருகிறோம்" என விளக்கம் அளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாதவிடாய் கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 13, மார்ச் 2026 5:00:23 PM (IST)

தமிழக டிஜிபி நியமனம்: மார்ச் 20-ல் ஆலோசனைக் கூட்டம் - யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 13, மார்ச் 2026 12:23:23 PM (IST)

ஜம்முவில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு முயற்சி - முதியவர் கைது!
வெள்ளி 13, மார்ச் 2026 8:49:29 AM (IST)

மேற்கு வங்கத்தின் 22-வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு: மம்தா பானர்ஜி வாழ்த்து!
வியாழன் 12, மார்ச் 2026 5:17:05 PM (IST)

கேரளம் பெயர் மாற்றம் மகிழ்ச்சியான தருணம் : கொச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
புதன் 11, மார்ச் 2026 5:10:36 PM (IST)

கோமா நிலையில் உள்ள இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!
புதன் 11, மார்ச் 2026 12:26:18 PM (IST)

