» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
போலி சான்றிதழ் விவகாரம்: ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கர் தேர்ச்சி ரத்து!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 11:06:55 AM (IST)
போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரியின் தேர்ச்சியை ரத்து செய்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேத்கர். இவர் தனது காரில் சைரன் பயன்படுத்தியது, கூடுதல் கலெக்டரின் அறையை பயன்படுத்தியது என தனது அதிகாரத்தை மீறிய செயல்களில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் இறங்கிய நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கர் தனது சாதி, பார்வைதிறன் உள்ளிட்டவற்றில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் குடிமைப்பணியில் ஊனமுற்றோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அவர் தவறாக பயன்படுத்தியதாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தனது பதவியை தவறாக பயன்படுத்தியது மற்றும் போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக மராட்டிய அரசு அவரை ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி பதவியில் இருந்து நீக்கம் செய்தது.
இதற்கிடையே போலி சான்றிதழ் சமர்பித்து பணியில் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்ட பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நேற்று ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர் வருங்காலங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதவும் நிரந்தரமாக தடைவிதித்து உத்தரவிட்டது.
முன்னதாக இந்த புகார் குறித்து கடந்த 30-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டநிலையில், அவர் விளக்கத்தை சமர்ப்பிக்க தவறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுங்கச்சாவடிகளில் புதிய விதிமுறை: ரொக்கப் பரிவர்த்தனைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:08:58 PM (IST)

கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல் பாகிஸ்தான் மிரட்டல்: பிரதமர் மவுனம் - மம்தா கண்டனம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:56:30 AM (IST)

மாநிலங்களவை உறுப்பினர்களாக திருச்சி சிவா, அன்புமணி, தம்பிதுரை உள்ளிட்டோர் பதவியேற்பு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:19:08 PM (IST)

இஸ்ரேலுக்கான ஏர் இந்தியா விமான சேவை மே 31 வரை ரத்து: போர்ப் பதற்றத்தால் அதிரடி முடிவு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:29:30 AM (IST)

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொலை: கொடூர தந்தை கைது!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:27:48 PM (IST)

வரும் கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயம்: சி.பி.எஸ்.இ. அதிரடி நடவடிக்கை!
சனி 4, ஏப்ரல் 2026 11:27:52 AM (IST)

