» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல் பாகிஸ்தான் மிரட்டல்: பிரதமர் மவுனம் - மம்தா கண்டனம்!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:56:30 AM (IST)

கொல்கத்தாவை தாக்குவோம் என்ற பாகிஸ்தான் மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

மேற்கு வங்காள சட்டசபைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் உள்ள பெதுவாடஹரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது: பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காஜா ஆசிப் கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். 

மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி ஏன் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கவில்லை? இதன் பின்னணி என்ன? தேர்தலுக்கு முன்பாக மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதலை நடத்த ஏதேனும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா? மத்திய அரசு மேற்கு வங்காள மக்களைக் குறிவைத்தால் அதனை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். 

இந்திய குடிமக்களாகிய நாங்கள் இதுபோன்ற மிரட்டல்களைச் சகித்து கொள்ளமாட்டோம். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கு வங்காளத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், "தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதா?" என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை எற்படுத்தியுள்ளது. மம்தாவின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory