» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு: 3வது முறை பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து!
திங்கள் 10, ஜூன் 2024 12:48:47 PM (IST)
மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன் பெறும் திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதற்கான கோப்பில்தான் பிரதமர் இன்று முதல் கையெழுத்திட்டுள்ளார். தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்ட பிரதமர் மோடி, பிரதமரின் விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 17வது தவணையை விடுவிப்பதற்கான ஆவணத்தில் மோடி கையெழுத்திட்டிருக்கிறார்.இது பற்றி பேசிய மோடி, முதல் நடவடிக்கை விவசாயிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம், விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் இருப்பதை காட்டுகிறது. வருங்காலங்களில் விவசாயிகள், விவசாயத் துறைக்காக அதிகம் உழைக்கவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு
சனி 27, டிசம்பர் 2025 3:48:59 PM (IST)

இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:01:58 PM (IST)

கிறிஸ்துமஸ் பொருள்களை அடித்து நொறுக்கிய சம்பவம்: இந்து அமைப்பினர் 4 பேர் கைது!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:08:11 PM (IST)

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமல்: ரயில்வேக்கு ரூ.600 கோடி வருவாய் அதிகரிப்பு
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:25:18 AM (IST)

டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை: பிரதமர் மோடி பங்கேற்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 12:46:38 PM (IST)



.gif)