» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் தேர்தல் வன்முறை : தலைமைச் செயலர், டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் சம்மன்!
புதன் 15, மே 2024 5:48:19 PM (IST)
ஆந்திராவில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி அம்மாநில தலைமைச் செயலர், டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
மக்களவை 4வது கட்ட தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் (மே 13) தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 81.86 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக இன்று (மே 15) தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிகபட்சமாக குப்பம் தொகுதியில் 89.88 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா கூறியுள்ளார்.
இதனிடையே, நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு ஆந்திராவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கு அம்மாநிலத்தை ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் மாறி மாறி குற்றம்சாட்டின. இதனால், அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தவறியது குறித்து நேரில் விளக்கம் அளிக்கும்படி ஆந்திர மாநில தலைமைச் செயலர், டிஜிபி.,க்கு தலைமை தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை, அவர்கள் டில்லி வந்து, கலவரம் ஏன் நடந்தது?, தடுக்க தவறியது ஏன்?, இனி வரும் நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மனில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
