» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் தேர்தல் வன்முறை : தலைமைச் செயலர், டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் சம்மன்!
புதன் 15, மே 2024 5:48:19 PM (IST)
ஆந்திராவில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி அம்மாநில தலைமைச் செயலர், டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
மக்களவை 4வது கட்ட தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் (மே 13) தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 81.86 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக இன்று (மே 15) தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிகபட்சமாக குப்பம் தொகுதியில் 89.88 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா கூறியுள்ளார்.
இதனிடையே, நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு ஆந்திராவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கு அம்மாநிலத்தை ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் மாறி மாறி குற்றம்சாட்டின. இதனால், அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தவறியது குறித்து நேரில் விளக்கம் அளிக்கும்படி ஆந்திர மாநில தலைமைச் செயலர், டிஜிபி.,க்கு தலைமை தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை, அவர்கள் டில்லி வந்து, கலவரம் ஏன் நடந்தது?, தடுக்க தவறியது ஏன்?, இனி வரும் நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மனில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
வெள்ளி 11, ஜூலை 2025 12:44:15 PM (IST)

இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்!!
வெள்ளி 11, ஜூலை 2025 10:58:09 AM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்குத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 11, ஜூலை 2025 8:23:20 AM (IST)

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வியாழன் 10, ஜூலை 2025 4:51:19 PM (IST)

ஏமனில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் நிமிஷா : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வியாழன் 10, ஜூலை 2025 12:44:26 PM (IST)

மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை: பள்ளி முதல்வர், ஆசிரியைகள் உட்பட 8பேர் மீது வழக்கு
வியாழன் 10, ஜூலை 2025 12:23:40 PM (IST)
