» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெயர் வைத்தால் சீனாவுக்கு சொந்தமாகிவிடாது : ஜெய்சங்கர் பதிலடி!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:50:04 AM (IST)
"அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவதால் அது அவர்களுக்கு சொந்தமாகிவிடாது" என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

முதலில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களையும் அடுத்து 15 இடங்களின் பெயர்களையும் 2023ல் 11 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியது. தற்போது 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், குடியிருப்புகளும் ஆறுகள், ஏரி, மலைப்பகுதிகள் ஆகியவை அடங்கும். இவற்றுக்கு சீனாவின் மாண்டரின் மொழியில் புதிய பெயர்களை சூட்டியுள்ளது.
சீனாவின் அத்துமீறல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கம் தான். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நமது ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது. அருணாச்சல பிரதேசத்தில் நமது ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாகவே அருணாச்சல பிரதேசம் இன்றும் நேற்றும் நாளையும் தொடரும். நீங்கள் வசிக்கும் வீட்டை என் பெயருக்கு மாற்றிவிட்டால் அது எனக்கு சொந்தமாகிவிடாது. சீனாவின் செயல்கள், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
