» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெயர் வைத்தால் சீனாவுக்கு சொந்தமாகிவிடாது : ஜெய்சங்கர் பதிலடி!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:50:04 AM (IST)
"அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவதால் அது அவர்களுக்கு சொந்தமாகிவிடாது" என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மீது சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அங்குள்ள நிலங்களுக்கெல்லாம் புதிய பெயர்களை சூடி, தங்கள் வரைபடத்தில் சீனா சேர்த்தது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்தது.முதலில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களையும் அடுத்து 15 இடங்களின் பெயர்களையும் 2023ல் 11 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியது. தற்போது 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், குடியிருப்புகளும் ஆறுகள், ஏரி, மலைப்பகுதிகள் ஆகியவை அடங்கும். இவற்றுக்கு சீனாவின் மாண்டரின் மொழியில் புதிய பெயர்களை சூட்டியுள்ளது.
சீனாவின் அத்துமீறல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கம் தான். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நமது ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது. அருணாச்சல பிரதேசத்தில் நமது ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாகவே அருணாச்சல பிரதேசம் இன்றும் நேற்றும் நாளையும் தொடரும். நீங்கள் வசிக்கும் வீட்டை என் பெயருக்கு மாற்றிவிட்டால் அது எனக்கு சொந்தமாகிவிடாது. சீனாவின் செயல்கள், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)

பனிமூட்டத்தால் விமானம் ரத்தானால் கட்டணம் திருப்பி செலுத்தப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:36:29 PM (IST)

சிறிய பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைக்க மத்திய அரசு திட்டம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 11:07:37 AM (IST)


.gif)