» சினிமா » செய்திகள்
கேரவனில் அத்துமீறியதாக நடிகை புகார்: மலையாள இயக்குநர் ரஞ்சித் கைது!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:56:42 PM (IST)
கேரவனில் நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட புகாரின் அடிப்படையில் பிரபல இயக்குநர் ரஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநரும், மூன்று முறை தேசிய விருது வென்றவருமான ரஞ்சித் பாலகிருஷ்ணன், படப்பிடிப்பு தளத்தில் நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட புகாரின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் ரஞ்சித் இயக்கி வந்த ஒரு புதிய படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர், போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில்: படப்பிடிப்பின் போது தன்னைத் தனியாகக் கேரவனுக்குள் அழைத்து, ரஞ்சித் தவறான முறையில் அத்துமீற முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், பாலியல் தொந்தரவு, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், ஆபாசச் சைகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, தொடுபுழா பகுதியில் இருந்த ரஞ்சித்தை போலீசார் கைது செய்து, விசாரணைக்காகக் கொச்சிக்கு அழைத்துச் சென்றனர்.
மலையாள சினிமாவில் கதைக்கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் ரஞ்சித். மோகன்லால் நடித்த 'ராவணபிரபு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய "திரைக்கதா", "இந்தியன் ரூபீ" மற்றும் "ஸ்பிரிட்" ஆகிய திரைப்படங்களுக்காக மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
ரஞ்சித் மீது இத்தகைய புகார்கள் எழுவது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது: 2009-ல் 'பாலேரி மாணிக்கம்' படப்பிடிப்பின் போது, ஒரு பெங்காலி நடிகை இவர் மீது புகார் அளித்திருந்தார். கேரளாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கையிலும் இவரது பெயர் இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின.
முன்னதாக ஒரு இளைஞரும் இவர் மீது புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு நடிகை புகார் அளித்துள்ளது இந்த விவகாரத்தை விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது.
இந்தக் கைது சம்பவம் மலையாளத் திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னணிப் பொறுப்பில் இருப்பவர்கள் மீதே தொடர் புகார்கள் எழும் நிலையில், படப்பிடிப்புத் தளங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?" என்ற கேள்வியை சமூக ஆர்வலர்களும் நடிகைகளும் எழுப்பி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலிவுட்டில் மீண்டும் நயன்தாரா: சல்மான் கானுடன் முதல்முறையாக ஜோடி சேர்கிறார்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:54:13 AM (IST)

புதிய படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:51:12 AM (IST)

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் ட்ராப்? சேயோன் முடிவால் திடீர் திருப்பம்!
சனி 28, மார்ச் 2026 10:51:11 AM (IST)

விஜய் - த்ரிஷா விவகாரம்: மனதில் பட்டதை பேசியதாக சமுத்திரக்கனி விளக்கம்!
புதன் 25, மார்ச் 2026 5:39:37 PM (IST)

நீங்கள் தான் எங்களின் அளவுகோல்: ரஜினியின் பாராட்டுக்கு துரந்தர் 2 இயக்குநர் நெகிழ்ச்சி!
செவ்வாய் 24, மார்ச் 2026 11:20:34 AM (IST)

அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடி வாங்குறவனாவது சொல்லணும்! - ஜனநாயகன் குறித்து அமீர் கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 4:54:34 PM (IST)

