» சினிமா » செய்திகள்
ஜன நாயகன் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா: விஜய்க்கு ஆதரவாக சிம்பு, ரவி மோகன்!
வியாழன் 8, ஜனவரி 2026 4:52:28 PM (IST)

ஜன நாயகன் வெளியாகும் அன்றே உண்மையான திருவிழா ஆரம்பமாகும் என்று விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிலம்பரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 9 ஆம் திரைக்கு வர இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைகாததால் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இதனால், விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜன நாயகன் பண்டிகை வெளியீட்டிலிருந்து விலகியது அவரின் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் எப்போதும் உங்களைத் தடுத்ததில்லை. இதைவிட பெரும் புயல்களைத் தாண்டி வந்துவிட்டீர்கள். இதுவும் கடந்து போகும். ஜன நாயகன் வெளியாகும் அன்றே உண்மையான திருவிழா ஆரம்பமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 9 ஆம் திரைக்கு வர இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைகாததால் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இதனால், விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜன நாயகன் பண்டிகை வெளியீட்டிலிருந்து விலகியது அவரின் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் எப்போதும் உங்களைத் தடுத்ததில்லை. இதைவிட பெரும் புயல்களைத் தாண்டி வந்துவிட்டீர்கள். இதுவும் கடந்து போகும். ஜன நாயகன் வெளியாகும் அன்றே உண்மையான திருவிழா ஆரம்பமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள பதிவில், "இதயம் நொறுங்கியது. விஜய்யண்ணா... உங்களின் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நானும் துணை நிற்கிறேன். உங்களுக்கு எந்த தேதியும் தேவையில்லை. நீங்கள்தான் தொடக்கம். தேதி எதுவாக இருந்தாலும், படம் வெளியாகும் நாள்தான் பொங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
தணிக்கை வாரியம் தொடர்பாக திரைத்துறையிலிருக்கும் பல பிரபலங்கள் மௌனம் காத்துவரும் சூழலில் ரவி மோகனின் இப்பதிவு விஜய் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தணிக்கை வாரியம் தொடர்பாக திரைத்துறையிலிருக்கும் பல பிரபலங்கள் மௌனம் காத்துவரும் சூழலில் ரவி மோகனின் இப்பதிவு விஜய் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயிலர் 2 முதல் பாகத்தை விட மாஸாக இருக்கும்: சுராஜ் வெஞ்சரமுடு நெகிழ்ச்சி
செவ்வாய் 3, மார்ச் 2026 12:40:27 PM (IST)

எஸ்டிஆர்-51 திரைப்படத்தில் மீண்டும் இணையும் மெகா கூட்டணி: சிலம்பரசன் - சந்தானம் காம்போ!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:47:29 AM (IST)

மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
ஞாயிறு 1, மார்ச் 2026 1:47:42 PM (IST)

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!!
வியாழன் 26, பிப்ரவரி 2026 3:50:46 PM (IST)

சினிமாவில் சிலரே எனக்குத் தடையாக இருக்கின்றனர்: சிவகார்த்திகேயன் பகிரங்கக் குற்றச்சாட்டு!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:51:40 PM (IST)

ரிஷப் ஷெட்டி நடிக்கும் ஜெய் ஹனுமான்: ஹம்பியில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:41:15 PM (IST)

