» சினிமா » செய்திகள்
நடிகர் விமல் வட்டியுடன் ரூ.3 கோடி கடனை செலுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 11:51:45 AM (IST)
நடிகர் விமல் வட்டியுடன் ரூ.3 கோடி கடனை செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், இருவருக்கு இடையே சமரச ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில், சுமார் ரூ.3 கோடியை கொடுப்பதற்கு விமல் ஒப்புக் கொண்டார். இதன்படி பணத்தை கோபி கேட்டபோது, விமல் எந்த பதிலும் சொல்லவில்லை. இதையடுத்து, ரூ.3 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரத்தை விமலிடம் இருந்து கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பைனான்சியர் கோபி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இருதரப்பையும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி உத்தரவிட்டது. இதில் சமாதானம் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர்கள் விமல், தயாரிப்பாளர் ஆர்.சிங்காரவேலன் ஆகியோர் ஆஜராகவில்லை.
மனுதாரர் கோபி தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ் வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், "மனுதாரர் கோபிக்கு, ரூ.3 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரத்தை 18 சதவீத வட்டியுடன் கொடுக்க வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
