» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் டிசிடபிள்யூ அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
தூத்துக்குடியில் சீலைன்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்திய மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மெதோடியஸ் மெமோரியல் டி20 கிரிக்கெட் போட்டி 11-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் போட்டியினை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளிதரன், துணை தலைவர் டாக்டர் மகிழ் ஜூவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த டி 20-கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 16 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் டிசிடபிள்யூ அணியும் - ஸ்டான்லி பில்டர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்டான்லி பில்டர்ஸ் அணி 20-ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் ஆடிய டிசிடபிள்யூ அணி நிர்ணயம் 13 ஓவர்களில் 2-விக்கெட் இழப்பிற்கு 113-ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு ரூ.40-ஆயிரம் ரொக்க பணம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற அணிக்கு ரூபாய் 20-ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. டி-20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டினர் ராஜாபோஸ் ரீகன் மற்றும் விஜய் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெய்ஸ்வால் அபார சதம் : தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:02:16 AM (IST)

ருதுராஜ், கோலி சதம் வீண் : 359 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய தென் ஆப்பிரிக்கா!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:47:32 AM (IST)

விஜய் ஹசாரே தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பின் விராட் கோலி.!
புதன் 3, டிசம்பர் 2025 12:46:19 PM (IST)

ஐ.பி.எல். போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்!
புதன் 3, டிசம்பர் 2025 8:28:27 AM (IST)

சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரடி சதம் : வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:11:10 PM (IST)

கோலி அபார சதம்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:38:55 AM (IST)


.gif)