» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த அதிரடி வீரர்!

வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:08:34 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ரசிகர்களால் 'பேபி ஏபிடி' என்றழைக்கப்படும்  டெவால்ட் பிரெவிஸ் இணைந்துள்ளார். 

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழலில் விளையாட உள்ளது.

இந்நிலையில் நடப்பு சீசனுக்கான சென்னை அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வீரரான டெவால்ட் பிரெவிஸ் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரசிகர்களால் 'பேபி ஏபிடி' என்றழைக்கப்படும் அதிரடி வீரரான டெவால்ட் பிரெவிஸ் கடந்த சீசனில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இந்நிலையில் சென்னை அணி அவரை ரூ.2.2 கோடிக்கு ஒப்பந்த செய்ய உள்ளது. இவர் சென்னை அணியின் அடுத்த போட்டியான மும்பைக்கு எதிரான ஆட்டத்திற்கு முன் (20-ம் தேதி) சிஎஸ்கே அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory