» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

நெல்லையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் அருண்குமார் (40). இவர் மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகப் புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் அருண்குமார் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அருண்குமார் மீது நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory