» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.39.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உழைக்கும் மகளிர் தங்கும் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற "வெற்றி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சியில் இருந்து முதல்வர் இக்கட்டடத்தைத் திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஆனந்த் மோகன், மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, விடுதியில் உழைக்கும் மகளிருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகளை நேரில் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிப்காட் வருவாய் அலுவலர் மா. சுகன்யா, திட்ட அலுவலர் கார்த்திகேயன், இளநிலைப் பொறியாளர்முருகன், கங்கைகொண்டான் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
2.07 ஏக்கர் பரப்பளவில், 1,24,446.82 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைத்தளத்துடன் கூடிய 3 தளங்களுடன் இவ்விடுதி கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 138 அறைகளில் 870 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 நபர்கள் தங்கும் 131 அறைகள் (786 படுக்கைகள்) 12 நபர்கள் தங்கும் 7 அறைகள் (84 படுக்கைகள்)
தங்கும் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாகக் கட்டில், படுக்கை விரிப்பு, தலையணை, துணி அலமாரி (Wardrobe), படிப்பதற்கான மேஜை மற்றும் நாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 228 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் விசாலமான உணவுக் கூடம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
விடுதியின் அனைத்துத் தளங்களிலும் அதிவேக Wi-Fi வசதியும், மகளிரின் பாதுகாப்பிற்காக அனைத்து முக்கியப் பகுதிகளிலும் சிசிடிவி (CCTV) கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வரவேற்பறை, சலவை மற்றும் துணி உலர்த்தும் அறை, மருத்துவ அறை, பார்வையாளர் அறை, இருசக்கர/நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், விளையாட்டு மைதானம் மற்றும் தொலைக்காட்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளாகத்தில் பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் தரமான தங்குமிடத்தை வழங்கும் வகையில் இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)



MannanAug 14, 2026 - 09:42:19 AM | Posted IP 104.2*****