» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)
தமிழகத்தில் மேக்கேதாட்டு பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்திலேயே தவெக தலைமையிலான அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டினார்.
மத்திய பாஜக அரசு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென் மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இதுகுறித்து முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறியதாவது: "திமுக கூட்டணியைச் சார்ந்த 32 எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொகுதி வரையறை தொடர்பாகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தின் முடிவு குறித்து இன்னமும் தெளிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை. தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் மேக்கேதாட்டு பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்திலேயே இந்த எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு முழுமையாக எதிரானவர்கள் அல்லர்; நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதையே கோருகிறோம். தேர்தலின் போது, தேர்தல் வெற்றியை விடத் தமிழ்நாட்டைப் பாதுகாப்பதே முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தோம். தேர்தலில் வெற்றி பெறுவதை விடத் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதே எங்களின் முக்கிய நோக்கம்.
தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தவெக தலைமையகத்தின் செயலாளரைப் போலச் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக அழைப்பதும், கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கடிதம் அனுப்புவதையும் அவரே செய்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சைபர் குற்றவாளிகளுக்கு வாடகை வங்கி கணக்கு: தமிழகம் முழுவதும் 837 பேர் அதிரடி கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:31:40 AM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:49:45 AM (IST)

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் ஒப்படைப்பா?: இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:38:45 AM (IST)

தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 10:29:24 AM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)


