» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ஆகஸ்ட் 15 முதல் தினசரி குடிநீர் விநியோகம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:25:34 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தபால் தந்தி காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர், "பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தல்
புதன் 5, ஆகஸ்ட் 2026 12:40:29 PM (IST)

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் 125 கோடி ஒதுக்கீடு : தமிழக நிதியமைச்சர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:54:21 AM (IST)

நல்லா போயிட்டு இருக்கு சார் : முதல்வர் விஜய் உற்சாக பேச்சால் மகிழ்ச்சியான முதல்வர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:35:08 AM (IST)

தவெக அரசின் தமிழ்நாடு பட்ஜெட் 2026 : தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:26:01 AM (IST)

கபினியின் உபரி நீர் வருகையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:06:43 AM (IST)

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)


