» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பதிவை புதுப்பிக்காத ‘எம்-சாண்ட்’ ஆலைகள் மீது நடவடிக்கை: தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை!
திங்கள் 27, ஜூலை 2026 10:37:14 AM (IST)

தமிழகத்தில் பொதுப்பணித்துறையில் பதிவைப் புதுப்பிக்காமல் இயங்கி வரும் 200-க்கும் மேற்பட்ட ‘எம்-சாண்ட்’ ஆலைகள் மீது விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமவளத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கனிமவளத் துறையில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டுபிடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அத்துறைக்கான அமைச்சர் பிரபு பல்வேறு மாவட்டங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, விதிகளை மீறிச் செயல்படும் குவாரிகளுக்குச் ‘சீல்’ வைக்க உத்தரவிட்டு வருகிறார். அத்துடன் முறைகேடுகளுக்குக் காரணமான கனிமவளத்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக எம்-சாண்ட் உற்பத்தியாளர்கள் இதன் விலையை உயர்த்தினர். இதுதொடர்பாக உற்பத்தியாளர் சங்கங்களை அழைத்து அமைச்சர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டது.
40% ஆலைகள் பதிவைப் புதுப்பிக்கவில்லை:
எம்-சாண்ட் நிறுவனங்களின் விதிமீறல்கள் குறித்துக் கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: "தமிழகத்தில் ஆற்று மணலுக்கு மாற்றாகக் கருங்கல் துகள்களைச் சுத்தப்படுத்தி எம்-சாண்ட் தயாரிக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகளுக்கு இதைப் பயன்படுத்த அரசு பரிந்துரைத்துள்ளது. இத்தகைய ஆலைகள் பொதுப்பணித்துறையில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
தற்போது தமிழகத்தில் 506 எம்-சாண்ட் ஆலைகள் பதிவு செய்து செயல்பட்டு வருகின்றன. இவற்றின் தரவுகளை ஆய்வு செய்ததில், சுமார் 40 சதவீதம் அதாவது 200 ஆலைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதிவைப் புதுப்பிக்காமல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
பதிவைப் புதுப்பிக்காத ஆலைகள் விற்பனை செய்யும் எம்-சாண்டின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இத்தகைய நிறுவனங்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது." கனிமவளத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் இ விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், விதிகளின்படி பதிவைப் புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் எம்-சாண்ட் நிறுவனங்கள் மீது விரைவில் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:28:22 PM (IST)

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:58:35 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல்: கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:06:08 PM (IST)

யாகாவராயினும் நா காக்க.... உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:54:25 AM (IST)

மக்களுக்கு நிறைய செய்யுங்கள் என ரஜினிகாந்த் வாழ்த்தினார்: அமைச்சர் வன்னி அரசு தகவல்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:50:17 AM (IST)


