» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து: நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
வெள்ளி 17, ஜூலை 2026 3:27:42 PM (IST)

விதிமீறல்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகளுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜயின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெண்டர்களைக் கோரி அவற்றைச் சமர்ப்பிப்பதற்கு 1 முதல் 4 நாட்கள் வரை மட்டுமே குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விதிமீறல் புகார்களைத் தொடர்ந்து, நிர்வாகக் காரணங்களுக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வறிவிப்பின்படி உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்களும், கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்களும், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த டெண்டர்கள் அனைத்தும் நகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்புப் பணி, வாரச்சந்தை கடைகள் ஏலம் மற்றும் புதிய போர்வெல் அமைக்கும் பணிகள் தொடர்புடையவை ஆகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் புதிய பேருந்து நிலைய விவகாரம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 17, ஜூலை 2026 5:12:51 PM (IST)

நீட் முறைகேடு போராட்டம்: சோனம் வாங்சுக்குடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த சீமான் கோரிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:53:33 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

ஊழல் புகாரில் சிக்கினால் பதவி நீக்கம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:18:32 AM (IST)

பாராசிட்டமால் சிரப்பில் ஆல்கஹால் அளவு குறித்து வதந்தி: பொது சுகாதாரத்துறை அறிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 11:13:35 AM (IST)

கோவை, பொள்ளாச்சி, பழனி வழியாகத் திருச்செந்தூர் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 10:42:36 AM (IST)


