» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:58:01 AM (IST)
தூத்துக்குடி அருகே நள்ளிரவில், மர்ம நபர்கள் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டுகளை உடைத்து, ரொக்கப் பணம் மற்றும் மிட்டாய் பெட்டிகளைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (44). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கல்லாப்பெட்டியில் இருந்த 1,500 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 1,000 ரூபாய் மதிப்புள்ள மிட்டாய் பாக்ஸ்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (30) என்பவரது கடையின் பூட்டையும் அந்த மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அங்கிருந்து 300 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 1,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்நாக்ஸ் மற்றும் திண்பண்டங்களைத் திருடியுள்ளனர்.
அதே நள்ளிரவில், கூட்டாம்புளியைச் சேர்ந்த ஆத்திமுத்து (45) என்பவரது கடையின் பூட்டையும் அந்த மர்ம கும்பல் உடைத்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்தக் கடையில் இருந்து எந்தப் பொருட்களும், பணமும் திருடப்படவில்லை. பூட்டு மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் கொள்ளை முயற்சி அளவோடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை கடைகளைத் திறக்க வந்த உரிமையாளர்கள், பூட்டுகள் உடைக்கப்பட்டுத் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துப் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களிடம் விபரங்களைக் கேட்டறிந்து, தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை: நிர்வாகம் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 5:53:18 PM (IST)

அரசாணைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்: தென்காசி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 5:16:31 PM (IST)

மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவா? சி. மகேந்திரன் தவெக-வில் இணைந்ததால் சிபிஐ பரபரப்பு அறிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 4:44:00 PM (IST)

தூத்துக்குடி ஐடிஐ-களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 19, ஜூன் 2026 4:22:18 PM (IST)

மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளம் தூர் வாரும் பணி துவக்கம்: விவசாயிகள் பெருமகிழ்ச்சி!!
வெள்ளி 19, ஜூன் 2026 3:43:39 PM (IST)

சமையல் சிலிண்டர், பைக்குகளுக்கு மாலை அணிவித்து தூத்துக்குடியில் சிபிஎம் நூதன போராட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 3:17:02 PM (IST)


