» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போதைப்பொருட்களை வைத்திருந்த இளைஞர் கைது: போலீசாரை மிரட்டித் தற்கொலை முயற்சி!
சனி 13, ஜூன் 2026 8:17:56 AM (IST)
கோவில்பட்டியில் கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவதாகக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்குக் ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடந்த வியாழக்கிழமை இரவு காவல் உதவி ஆய்வாளர் நியூட்டன் ஜெபராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மந்திதோப்பு சாலை இந்திரா காலனியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரோந்து வந்த போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். போலீசார் அவரைச் சுற்றி வளைத்தபோது, அவர் போலீசாரை அவதூறாகப் பேசி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இருப்பினும், போலீசார் அவரை அதிரடியாகப் பிடித்துச் சோதனையிட்டு விசாரணை நடத்தினர். அதில், அவர் கோவில்பட்டி துளசிங்க நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் விக்னேஸ்வரன் (29) என்பது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 150 கிராம் கஞ்சா மற்றும் 20 கிராம் மெத்தம்பேட்டமைன் ஆகிய போதைப்பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, விக்னேஸ்வரன் திடீரென தரையில் கிடந்த கல்லை எடுத்துத் தனது நெற்றியில் பலமாகத் தாக்கித் தற்கொலைக்கு முயன்றார். இதில் காயமடைந்த அவரை மீட்ட போலீசார், உடனடியாகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சைக்குப் பின், இச்சம்பவம் குறித்துக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விக்னேஸ்வரன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

சேலத்தில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் அதிரடி கைது!
சனி 13, ஜூன் 2026 12:22:44 PM (IST)

மாணவி கொலை வழக்கு: மரண தண்டனை பெற்ற குற்றவாளி மேல்முறையீடு செய்ய மீண்டும் அவகாசம்!
சனி 13, ஜூன் 2026 10:40:05 AM (IST)

புகையிலைக்கு நாடு முழுவதும் முழுமையான தடை : மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 13, ஜூன் 2026 10:32:37 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்எல்சி நிறுவனம் ரூ.3.65 கோடி சிஎஸ்ஆர் நிதி: 11 திட்டங்களுக்கு ஒப்புதல்!
சனி 13, ஜூன் 2026 8:52:16 AM (IST)


