» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனக் கட்டண முறைக்கேடை அதிகாரிகள் கண்காணிக்கத் தவறியது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கான 100 ரூபாய் விரைவு தரிசனக் கட்டணச் சீட்டு வழங்கும் நடைமுறையில், சுமார் 25 லட்சம் ரூபாய் அளவிற்குப் பெரும் நிதி முறைக்கேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்ததோடு பின்வரும் முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100 ரூபாய் விரைவு தரிசனத்தில் 25 லட்சம் ரூபாய் அளவிற்கு இவ்வளவு பெரிய முறைக்கேடு நடக்கும் போது, அதனை ஆலை மற்றும் கோவில் உயர் அதிகாரிகள் கண்காணித்துத் தடுக்கத் தவறியது ஏன்?
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோவிலுக்கு நாள்தோறும் சராசரியாக எத்தனை பக்தர்கள் வருகை தருகின்றனர் என்ற துல்லியமான விபரத்தைக் கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த முறைக்கேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!" நயினார் நாகேந்திரன் பேட்டி
வெள்ளி 5, ஜூன் 2026 4:47:36 PM (IST)

அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி : புதிய அரசியல்... புதிய பாதை! – அண்ணாமலை அறிவிப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 3:47:51 PM (IST)

பெண் குழந்தையை சாக்குப்பையில் போட்டுத் துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர் கைது!
வெள்ளி 5, ஜூன் 2026 12:45:29 PM (IST)

பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கு சிபிஎம் கண்டனம்! – புதிய கூட்டணி விவகாரத்தில் அரசியல் மோதல்
வெள்ளி 5, ஜூன் 2026 12:00:45 PM (IST)

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல் : கட்சித் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 11:09:38 AM (IST)

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக திருநாவுக்கரசு நியமனம்
வெள்ளி 5, ஜூன் 2026 8:45:07 AM (IST)


