» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள் முழுமையாக தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
ஞாயிறு 31, மே 2026 8:31:12 PM (IST)

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளிகள் திறப்பையொட்டி மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிகளில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டிகள், கழிவறைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகியவை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், பள்ளி வளாகங்களில் உள்ள தேவையற்றப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த மேயர் உத்தரவிட்டார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, "முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 2021-ஆம் ஆண்டில் 100 மாணவர்களுடன் இருந்த பள்ளிகளில், தற்போது 900 முதல் 1200 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர்.
மாநகராட்சியின் கீழ் உள்ள 20 பள்ளிகளும் (தொடக்கப்பள்ளி 8, நடுநிலைப்பள்ளி 11, மேல்நிலைப்பள்ளி 1) தற்போது திறப்பதற்கு முழுமையாகத் தயாராக உள்ளன. எனவே, பொதுமக்கள் தங்களது குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்த்துப் பயனடைய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், கவுன்சிலர் மும்தாஜ், பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் மேயர், ஆணையரின் நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
அண்டன் ஜாய்Jun 1, 2026 - 09:03:00 AM | Posted IP 172.7*****
தூத்துக்குடி 2ஆம் கேட் தொடங்கி பக்கில் ஒடை பாலம் வரை செல்லீ அம்மன் கோயில் அருகில் கல் பதிப்பதற்காக ரோட்டில் மூன்றை அடி எடுத்து இருக்கிறார்கள் இதன் மூலம் ரோடு மிக குறுகலாகும். பிளாட்பாரத்தை ரோட்டில் போடுகிறார்கள்.. உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும்... இல்லையென்றால் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அந்தப் பகுதியில்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் முன்னாள் கோவில் தர்மகர்த்தாவுக்கு அரிவாள் வெட்டு! – 2பேர் கைது!
திங்கள் 1, ஜூன் 2026 11:04:16 AM (IST)

பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய 10 பேர் கும்பல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
திங்கள் 1, ஜூன் 2026 8:35:47 AM (IST)

குப்பை வண்டியில் தவறுதலாகப் போட்ட 5 பவுன் சங்கிலி மீட்பு - தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு!
திங்கள் 1, ஜூன் 2026 8:29:01 AM (IST)

திருச்செந்தூரில் 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்: பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடல்!
திங்கள் 1, ஜூன் 2026 8:18:06 AM (IST)

நெல்லை அருகே பொதுமக்கள் மீது அரிவாள் வீச்சு: போலீஸ் ஏட்டுக்கு வெட்டு - ரவுடி சுட்டுப்பிடிப்பு!
திங்கள் 1, ஜூன் 2026 8:10:53 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் நள்ளிரவில் திடீர் ஆய்வு: நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்!
திங்கள் 1, ஜூன் 2026 8:01:48 AM (IST)



அண்டன் ஜாய்Jun 1, 2026 - 09:03:20 AM | Posted IP 162.1*****