» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் சூறைக் காற்றுடன் திடீர் கனமழை : மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன!

சனி 2, மே 2026 8:48:01 AM (IST)


தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்தது. குறிப்பாகப் பாளையங்கோட்டையில் நேற்று 100.5 டிகிரி வெயில் பதிவானது. இதனால் ஏற்பட்ட அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மாலை 6 மணி அளவில் திடீரென்று இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சிறிது நேரம் கொட்டித் தீர்த்த இந்த மழையானது இரவு வரை சாரலாக நீடித்ததால், வெப்பம் குறைந்து இதமான சூழல் ஏற்பட்டது.

சூறைக் காற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள்:

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பூங்கா மற்றும் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. திருவண்ணநாதபுரத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், சிவராமன் என்பவருக்குச் சொந்தமான பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.

நெல்லை டவுன் பகுதியில் இரண்டு தெருவிளக்கு கம்பங்கள் சாய்ந்தன. பொட்டல் பகுதியில் மின்கம்பங்கள் சரிந்ததால் பொட்டல், திருவண்ணநாதபுரம், அருகன்குளம் உள்ளிட்ட இடங்கள் இருளில் மூழ்கின. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டனர்.

மழை அளவு விவரம் (மி.மீ):

கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு வருமாறு:

ஊத்து: 78

நாலுமுக்கு: 71

காக்காச்சி: 66

மாஞ்சோலை: 44

அம்பை: 37

கன்னடியன் கால்வாய்: 13

மணிமுத்தாறு: 5

கருப்பாநதி: 1


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory