» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில்வே மின்பாதை பராமரிப்பில் புதிய மைல்கல் : நாசரேத்தில் சிறப்பு ரயில் பெட்டி அறிமுகம்!

வெள்ளி 1, மே 2026 8:37:07 AM (IST)

மதுரை கோட்டத்தில் ரயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், மின் கம்பிகளைப் பராமரிக்கவும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்யவும் அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சிறப்பு ரயில் பெட்டி ஒரு சிறிய நடமாடும் பணிமனை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மின்சார கம்பி வடம் அருகே சென்று பழுது பார்க்கத் தானாக உயரும் லிப்ட் வசதி. பராமரிப்பு பணிகளுக்காகப் பெட்டியிலேயே ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. பழுதுகளைச் சரி செய்யத் தேவையான அனைத்து நவீனக் கருவிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ரயில் நிலையத்தில் இந்த வசதி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது 18 சிறப்புப் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, பழனி, காரைக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய நிலையங்களில் இதற்கெனத் தனிப் பாதை அமைக்கப்பட்டு இவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மானாமதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, புனலூர் ஆகிய நிலையங்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில் பாதைக்கு அருகே 2 மீட்டர் தூரத்தில் வளர்ந்துள்ள மரங்களால் மின் கம்பிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ரயில் பாதை அருகே ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் குறித்துத் தகவல் தெரிந்தால், உடனடியாக அருகில் உள்ள ரயில் நிலைய அதிகாரி அல்லது கேட் பாதுகாவலரிடம் தெரிவிக்குமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory