» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை அருகே பெண்ணைத் தாக்கி 29 பவுன் நகை கொள்ளை - சிறுவன் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:38:01 PM (IST)
திருநெல்வேலி அருகே பெண்ணைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து, 29 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.
கடந்த 18.04.2026 அன்று, முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐ.ஆர்.டி. (IRT) பாலிடெக்னிக் கல்லூரியின் பின்புறமுள்ள குடியிருப்புப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அடையாளம் தெரியாத நான்கு பேர், வீட்டிலிருந்த பெண்ணைத் தாக்கிவிட்டுத் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் உத்தரவின் பேரில், சேரன்மகாதேவி உட்கோட்டத் துணை கண்காணிப்பாளர் அண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில், முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் தனிப்படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில், இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவா (26), வீரசங்கிலி (20), இசக்கிமுத்து (21) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 29 சவரன் தங்க நகைகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன.
வழக்குப் பதிவு செய்த சில நாட்களிலேயே குற்றவாளிகளைக் கண்டறிந்து, கொள்ளை போன நகைகளை மீட்ட டி.எஸ்.பி. அண்டோ ஆரோக்கியராஜ் மற்றும் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினரை, மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் வெகுவாகப் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதல்வராவார்... 200+ தொகுதிகளில் தவெக வெல்லும் - செங்கோட்டையன் பேட்டி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:44:41 PM (IST)
_1777377317.jpg)
தேர்தல் முடிவுகளுக்குப் பின் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுக: சீமான் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:25:41 PM (IST)

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முதல்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு பணி நிறைவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:17:19 PM (IST)

கோடை வெயில்: நெல்லை அணைகளின் நீர்மட்டம் சரிவு – 52 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:49:57 PM (IST)

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார் கோவை சூர்யா!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:43:20 PM (IST)

மே 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:26:43 PM (IST)


