» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக, 290-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கப் போவதில்லை என கிராம மக்கள் ஒன்றிணைந்து அதிகாலை முதலே தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். காலை முதல் ஒரு வாக்கு கூட அங்கு பதிவாகாமல் இருந்தது.
இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி, வாக்குச் செலுத்தக் கூடாது எனக் கூறி அங்கிருந்து விரட்ட முயன்றனர். இதனால் வாக்குச்சாவடி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து, அந்த இளம்பெண்ணை பொதுமக்களிடம் இருந்து மீட்டு வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதன் மூலம், நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் முதல் வாக்கு பதிவானது.
வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய, தேர்தல் ஆணைய அதிகாரிகளும் போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் சமரசப் பேச்சுகளை நடத்தி வருகின்றனர். நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, மக்களை வாக்களிக்க வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுப்பெண்: கோவில்பட்டியில் வைரலாகும் புகைப்படம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:58:43 PM (IST)

யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்! - மதுரையில் வாக்களித்த மு.க.அழகிரி சூசக பதில்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:47:49 PM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 70% வாக்குப் பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:23:28 PM (IST)

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வாக்குப்பதிவு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:20:39 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:28:12 PM (IST)

