» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:49:36 AM (IST)

தஞ்சை அருகே தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்ற திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் வாகனத்தை மறித்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்காக, முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் சென்றடைந்தார். அங்கிருந்து பிரசார வாகனத்தில் சாலை வழியாகத் திருவாரூர் நோக்கிப் பயணம் மேற்கொண்டார்.
அவர் தஞ்சாவூர் அடுத்த சாலியமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் முதல்வரின் வாகனத்தை நிறுத்தினர். உரிய விதிமுறைகளின்படி, அதிகாரிகள் வாகனத்திற்குள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது முதல்வர் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கண்டறியப்படாததைத் தொடர்ந்து, வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
சோதனைக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மையார் நினைவகத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் இன்று வாக்கு சேகரிக்கிறார். கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி சோதனைச் சாவடி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல்வரின் வாகனத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம்: மக்களே முடிவு செய்யும் சுதந்திரம் - கனிமொழி விளக்கம்
செவ்வாய் 31, மார்ச் 2026 10:43:38 AM (IST)

மகளிர் அணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தவெக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு!
செவ்வாய் 31, மார்ச் 2026 10:34:20 AM (IST)

தமிழ்நாட்டில் 68 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 10:17:56 AM (IST)

தந்தை - மகன் கொலை வழக்கில் ஏப்.2-ல் தண்டனை அறிவிப்பு : சி.பி.ஐ மீது நீதிமன்றம் அதிருப்தி !
செவ்வாய் 31, மார்ச் 2026 8:31:34 AM (IST)

திமுக, அதிமுகவில் சீட் கிடைக்காதவர்களுக்கே த.வெ.க-வில் வாய்ப்பு: அமைச்சர் கீதா ஜீவன் கிண்டல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:26:02 AM (IST)

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.10,000 சிறப்புத் தொகை : எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:12:31 AM (IST)

