» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)
தென்காசி அருகே கோவிந்தப்பேரி பகுதியில் உள்ள பள்ளகாடுபட்டி பொத்தை மலையில் நேற்று திடீரெனப் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் பள்ளகாடுபட்டி பொத்தை மலைப்பகுதியில் அடர்ந்த மரங்களும், செடி-கொடைகளும் நிறைந்துள்ளன. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், நேற்று மதியம் தொடங்கிய தீ, காற்றின் வேகம் காரணமாக மலையின் மற்ற பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவியது. தீப்பொறிகள் காற்றில் பறந்து விழுந்ததால், அடுத்தடுத்த மரங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
இந்தத் தீ விபத்தில் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் கருகிச் சாம்பலாகின. மேலும், இந்தப் பொத்தை மலைப்பகுதியில் வசித்து வந்த சிறிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன வகைகள் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த கடையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதி என்பதால் தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும், நவீன கருவிகள் மற்றும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தித் தீ மேலும் பரவாமல் தடுக்க வனக்காவலர்கள் போராடி வருகின்றனர்.
கடும் வெயில் காரணமாக காய்ந்த இலைகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இருப்பினும், மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்திலும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க ஆதரவுடன் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி
புதன் 1, ஏப்ரல் 2026 12:05:18 PM (IST)
_1775022580.jpg)
நெல்லையில் ஏப்.3-ல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: இரண்டாம் கட்ட பயண விவரம் வெளியீடு!
புதன் 1, ஏப்ரல் 2026 11:19:44 AM (IST)

வணிக சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!
புதன் 1, ஏப்ரல் 2026 10:28:37 AM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
புதன் 1, ஏப்ரல் 2026 10:21:56 AM (IST)

நெல்லை தம்பதியிடம் 15 பவுன் நகை பறிப்பு: தானே ரயில் நிலையத்தில் துணிகரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:35:50 AM (IST)

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:20:51 AM (IST)

