» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊருணியில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாப சாவு : நண்பர்களுடன் குளித்தபோது சோகம்!

திங்கள் 16, மார்ச் 2026 8:30:48 AM (IST)

சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து கிராமத்தில், ஊருணியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து கிராமத்தைச் சேர்ந்த மேரி என்பவரது மகன் ரியான் (6). இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்தான். நேற்று முன்தினம் மாலை, ரியான் தனது நண்பர்களுடன் ஊர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் அவர்கள் அனைவரும் அருகில் இருந்த ஊருணிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.

நண்பர்களுடன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த ரியான், எதிர்பாராதவிதமாக ஊருணியின் ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் சிறுவன் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடனடியாக ஊருக்குள் ஓடிச் சென்று மக்களிடம் தகவல் தெரிவித்தனர்.

கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவன் ரியானின் உடலை மீட்டனர். பின்னர் அவனது உடல் உடற்கூறு ஆய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) இசக்கித்துரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விளையாடச் சென்ற சிறுவன் ஊருணியில் மூழ்கிப் பலியான சம்பவம் படுக்கப்பத்து கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory