» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாநகராட்சியில் காலை உணவை குப்பையில் வீசிய தூய்மை பணியாளர்கள்

சனி 31, ஜனவரி 2026 8:36:34 AM (IST)

நெல்லை மாநகராட்சியில் தரமற்ற முறையில் காலை உணவை வழங்கியதாக புகார் தெரிவித்த தூய்மை பணியாளர்கள், அந்த உணவை குப்பையில் வீசினர்.

தமிழகத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகராட்சியிலும் கடந்த 1 மாதமாக தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

4 மண்டலங்களிலும் 750 தூய்மை பணியாளர்களுக்கு காலை நேரத்தில் உப்புமா, இட்லி, பொங்கல் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கிய சில நாட்கள் மட்டும் உணவு தரம் நன்றாக இருந்தாதகவும், அதன் பிறகு வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்றதாக இருந்ததாக கூறி, அதனை பணியாளர்கள் சாப்பிடாமல் குப்பை தொட்டியில் வீசினார்கள். இதே போல் சில நாட்களாக சாப்பிட முடியாமல் உணவை குப்பை தொட்டியில் போடுவதாக கூறினார்கள்.

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், "சாம்பார் தண்ணீர் போல இருக்கிறது, உப்புமா மற்றும் பொங்கலில் தண்ணீர் அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு வழங்கப்படும் ரூ.540 ஊதியத்தை ரூ.800 வரை உயர்த்தி வழங்க வேண்டும். எங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். காலை உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை தங்களின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும்" என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory