» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:13:41 AM (IST)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. ஆங்கில புத்தாண்டு பிறப்பு மழையுடன் தொடங்கியது. சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. லட்சதீவு-குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவிகளில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.
வெள்ளி 2, ஜனவரி 2026 5:22:59 PM (IST)

அமித்ஷா வருகைக்கு பின்பு தமிழகத்தில் பாஜக வெற்றி பெறப் போகிறது: தூத்துக்குடியில் தமிழிசை பேட்டி
வெள்ளி 2, ஜனவரி 2026 4:56:55 PM (IST)

வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து: ஐயப்ப பக்தர்கள் 13பேர் காயம்
வெள்ளி 2, ஜனவரி 2026 4:46:50 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி ஆய்வு
வெள்ளி 2, ஜனவரி 2026 4:36:07 PM (IST)

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:22:46 PM (IST)

சபரிமலைக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதி விபத்து: 2பேர் உயிரிழப்பு
வெள்ளி 2, ஜனவரி 2026 12:49:28 PM (IST)

