» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரூர் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்!
திங்கள் 29, டிசம்பர் 2025 11:06:53 AM (IST)

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று, கரூர் மாவட்டம் வேலுசாமபுரத்தில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகப் பரப்புரைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், சுமார் 100 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர். மேலும், துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல், கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:07:43 PM (IST)

இருக்கின்ற திட்டங்களையே பராமரிக்க இயலாத தி.மு.க. அரசு: ஓபிஎஸ் கடும் தாக்கு!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:48:08 PM (IST)

நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை: பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:41:54 PM (IST)

திமுக ஆட்சியில் திரும்பிய திசையெல்லாம் போராட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:31:29 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்!
திங்கள் 29, டிசம்பர் 2025 3:23:16 PM (IST)

இந்தியா கூட்டணி உடையும் என்ற நயினார் நாகேந்திரன் கனவு பலிக்காது : கனிமொழி எம்.பி. பேட்டி
திங்கள் 29, டிசம்பர் 2025 3:16:36 PM (IST)



.gif)