» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்

செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

பொருநை அருங்காட்சியகத்திற்கு 23.12.2025 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். திருநெல்வேலி மண்டலம் சார்பாக பொருநை அருங்காட்சியம் செல்வதற்கு திங்கள் முதல் சனி வரை தினசரி பொருநை அருங்காட்சியகம் செல்வதற்கு திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 11 நகரப் பேருந்துகளும், விடுமுறை நாட்களில் கூடுதலாக 7 நகரப் பேருந்துகளும், நெல்லை சந்திப்பிலிருந்து வண்ணார்பேட்டை, பாளை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சாராள் தக்கர் கல்லூரி, ஜோஸ் பள்ளி விலக்கு வழியாக பொருநை அருங்காட்சியகத்திற்கு இயக்கப்படுகிறது.

அருங்காட்சியகத்திலிருந்து அதே வழியில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திற்கும் இயக்கப்படும். பொருநை அருங்காட்சியத்திற்கு செல்லும் பயணிகள் இப்பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory