» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜவ்வாது மலையில் தங்கக்காசு புதையல் கண்டெடுப்பு : அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

திங்கள் 3, நவம்பர் 2025 9:22:21 PM (IST)

திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் பள்ளம் தோண்டப்பட்டபோது,  100-க்கும் மேற்பட்ட தங்கக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கோவிலூர் சிவன் கோவில் உள்ளது. 3-ம் ராஜராஜ சோழன் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த கோவிலில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவிலின் சிதிலமடைந்த கருவறையை கட்டுவதற்காக இன்று பள்ளம் தோண்டப்பட்டது.

சில அடி தூரம் பள்ளம் தோண்டப்பட்டபோது, அதில் புதையல் ஒன்று இருந்ததை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த புதையலை மீட்டு பார்த்தபோது 100-க்கும் மேற்பட்ட தங்கக்காசுகள் அதில் இருந்ததுள்ளது. இதையடுத்து கோவில் கருவறையில் கண்டெடுக்கப்பட்ட தங்கக்காசு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கக்காசுகளை ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory