» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 7:33:03 PM (IST)
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே வருகிற 27ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வருகிற 27.10.2025 திங்கள்கிழமை அன்று திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே ஒரு ஜோடி முன்பதிவு செய்யப்படாத பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 27 ந் தேதி திங்கட்கிழமை திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் வண்டி எண் 06106 திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு இரவு 10.30 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் வண்டி எண் 06105 இரவு 11 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 28 ந் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்.
இந்த சிறப்பு ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய பெட்டிகள் என மொத்தம் 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் உலக நன்மைக்காக சிறப்பு துவா : திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
சனி 25, அக்டோபர் 2025 4:56:22 PM (IST)

மின் வாரிய அலுவலகத்தில் திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி : கோவில்பட்டியில் பரபரப்பு!
சனி 25, அக்டோபர் 2025 4:50:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்தார் ராமதாஸ்!
சனி 25, அக்டோபர் 2025 4:06:09 PM (IST)

பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ஆம் தேதி வெளியாகும் : அன்பில் மகேஸ் அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 4:00:16 PM (IST)

நெல்லையில் பெண் பயணியை அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்
சனி 25, அக்டோபர் 2025 8:36:18 AM (IST)


.gif)