» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு: இளஞ்சிறார் உட்பட 5 பேர் கைது
திங்கள் 23, ஜூன் 2025 11:15:21 AM (IST)
நெல்லையில் காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் இளஞ்சிறார் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்னர்.
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதான வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணி அளவில் பூங்காவில் நின்ற சில இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு குடும்பத்தினருடன் வந்த போலீஸ்காரரான மணிமுத்தாறு 9-வது பட்டாலியனைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா (29) இளைஞர்களை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், பூங்காவுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லாவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இளஞ்சிறார் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர. நெல்லையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை : கனிமொழி எம்பி பேச்சு
திங்கள் 14, ஜூலை 2025 8:45:26 PM (IST)

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
திங்கள் 14, ஜூலை 2025 5:49:00 PM (IST)

காப்புரிமை விவகாரம்: நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 14, ஜூலை 2025 4:38:44 PM (IST)

இபிஎஸ் ஒப்புக் கொண்டால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன் : ஓபிஎஸ் அறிவிப்பு!
திங்கள் 14, ஜூலை 2025 4:24:50 PM (IST)

பள்ளிகளில் ப வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்: பாஜக குற்றச்சாட்டு!
திங்கள் 14, ஜூலை 2025 12:57:07 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
திங்கள் 14, ஜூலை 2025 12:17:46 PM (IST)
