» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
சனி 14, ஜூன் 2025 9:04:09 AM (IST)

கனமழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தென்காசி, நெல்ைல உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி விழுந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.
அருவிகளில் குளிக்க அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரைகளில் நின்று செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அருவிக்கரைகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அருவிகளில் நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக அரசு இடையூறு : நயினார் நாகேந்திரன்
சனி 14, ஜூன் 2025 5:35:54 PM (IST)

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!
சனி 14, ஜூன் 2025 5:17:55 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவ, மாணவியருக்கு அண்ணாமலை வாழ்த்து!
சனி 14, ஜூன் 2025 5:05:14 PM (IST)

மாப்பிள்ளை அவர்தான், சட்டை என்னுடையது: மத்திய அரசை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்!
சனி 14, ஜூன் 2025 4:54:52 PM (IST)

பா.ஜ.க. ஓ.பி.சி. மாநில செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
சனி 14, ஜூன் 2025 4:04:48 PM (IST)

எழுத்தறிவு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 14, ஜூன் 2025 3:24:51 PM (IST)
