» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஏப்.28ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: வருவாய் அலுவலர் தகவல்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:33:42 AM (IST)
திருநெல்வேலியில் வருகிற 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள்/தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் 28.04.2025 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் : புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:49:58 PM (IST)

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:16:40 PM (IST)

மதுரை மேயரின் ராஜினாமா தீர்மானம் ஏற்பு: 5 நிமிடங்களில் மாநகராட்சி கூட்டம் நிறைவு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:10:07 PM (IST)

தி.மு.க.வின் உருட்டுக்கடை அல்வா: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:54:21 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது : தேர்தல் ஆணையம்
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:23:52 PM (IST)

நூறு கோடி இந்துக்களை அவமதிக்கும் செயல்: துணை முதல்வர் உதயநிதிக்கு பாஜக கண்டனம்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:17:33 PM (IST)
