» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஏப்.28ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: வருவாய் அலுவலர் தகவல்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:33:42 AM (IST)
திருநெல்வேலியில் வருகிற 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள்/தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் 28.04.2025 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிகளில் பண நடமாட்டத்தைக் கண்காணிக்க 20 முகமைகள் தீவிரம்: ஆட்சியர் தகவல்!
புதன் 18, மார்ச் 2026 10:48:07 AM (IST)

நான் முதல்வன் திட்டம்: ஜப்பானில் பயிற்சி பெற சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவி தேர்வு!
புதன் 18, மார்ச் 2026 10:38:40 AM (IST)

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!
புதன் 18, மார்ச் 2026 10:33:48 AM (IST)

கடன் தொல்லையால் விபரீத முடிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
புதன் 18, மார்ச் 2026 10:26:15 AM (IST)

அரசுப் பணம் கையாடல் புகார்: புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
புதன் 18, மார்ச் 2026 10:16:10 AM (IST)

பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள் விறுவிறுப்பு!
புதன் 18, மார்ச் 2026 8:32:04 AM (IST)

