» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)
திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் ஹுசேன் (61). நிலம் தொடர்பான பிரச்னையால், மார்ச் 18ல் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவ்பிக், மனைவி நுார்னிஷா உள்ளிட்டோரை போலீசார் தேடிவந்தனர்.
இதில் முகமது தவ்பிக் போலீசாரால் சுட்டு கைது செய்யப்பட்டார். ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நுார்னிஷா, நேற்று தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு, இரவு நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது தவ்பிக், அக்பர் ஷா, பீர்முகமது, கார்த்திக் என்ற அலிஷேக் ஆகியோர் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)


.gif)